flashvortex

Monday, June 4, 2012

ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.




பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.
பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.
இவர்களுக்கான வாழ்விட வசதிகளை பல தனியார் நிறுவனங்களான தென்னிந்திய திருச்சபை, போரூட், அலைன்ஞ், கெக்டப், ;யுடினட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இதில் அலைன்ஞ் நிறுவனம் கட்டிக் கொடுத்த வீடுகள் இன்னும் பூரணமாக முடியவில்லை என இப் பகுதி மக்கள் தெரிவித்தகர். இதனால் இக் கிராமத்தில் வசிக்கும் 58 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் இன்றியும் 60 குடும்பங்கள் கிணறு வசதிகள் இன்றியும் சிரமப்பட்டு வருகின்றன.

வீடு ஒன்றுக்கு அடிப்படை வசதிகள் என்பது முக்கியமானதொன்றாகும். கிணறு வசதிகளைவிட மலசலகூட வசதிகள் மிக முக்கியம். ஆனால் அவைஇன்றியே இக் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அலைன்ஞ் நிறுவனத்தோடு  நீங்கள் தொடர்பு கொள்ளவில்லையா? என்று கேட்ட போது  தும்பளைக்கிழக்கு கிராமத்தைத்சேர்ந்த தயாளன் கூறுகையில் 'அலைன்ஸ் நிறுவனம் வீடு கட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நாளிலே இடையில் விட்டு சென்றுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக எந்த வித தொடர்பும் இருக்கவில்லை. இதனால் பத்திரிகையில் செய்திகளை வெளியிட்ட பின்னார் மீண்டும் வந்து குறையாக இருந்த வீட்டை முடித்து தருகின்றோம் என்றார்கள். சொன்னது மட்டும் தான் மீண்டும் எந்த வித தொடர்பும் இன்றி சென்று விட்டனர்'. என்று கூறினார்.

இங்கு இருக்கின்ற வீடுகளை பாருங்கள் கிணறும்இல்லை, மலசலகூடமும் இல்லை இப்படி எத்தனை வீடுகள் இருக்கின்றது. ஏன்று கூறிய படி கிராமத்தில் வசிக்கும் துரையப்பா அன்னலிங்கம் வந்தாhர். 'சுனாமிக்கு முன்பு எங்கள் வீடுகளிலும் எல்லா வசதிகளுடனும் தான் இருற்தது. தற்போது எதுவும் இல்லை கிணறு, மலசலகூடம் இல்லை என்றால் கஸ்ரம் தானே. ஏங்களுடைய குடும்பம் கடற்தொழிலையே நம்பியுள்ளது. செய்கின்ற தொழில் எனண்ணெய் காசக்கு போய்விடுகின்றது. சுhப்பாட்டிற்கே கஸ்ரம் இப்படி இருக்க எவ்வாறு நாம் கிணற்றையும் , மலசலகூடத்தையும் கட்டுவது' என்று கேள்வி எழுப்பினார்.

இதே கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய தீபனா தயாளன் கூறுகையில் 'நாங்கள் 05 பேர் எங்களுடைய வீட்டுக்கும் கிணறும், மலசலகூடமும் இல்லை பக்கத்து வீட்டுக்கு தான் செல்வோம். 3,4 மாதங்களுக்கு முன்பு iஉசஉ நிறுவனம் பார்த்து கிணறு மலசலகூட வசதிகள் இல்லாதவர்களின் தொகையை எடுத்துச் சென்றுள்ளார்கள். எங்கட கஸ்ரங்களை iஉசஉ நிறுவனமாவது தீர்த்து வைக்குமா' என்ற ஏக்கத்துடன் கூறி முடித்தார்.
ஒரு வீட்டிற்கு மலசலகூடம் இல்லை என்றால் எவ்வளவு கஸ்ரம் என்று எங்களின் வாழ்க்கையில் நீங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் என்ற கருத்தை முன் வைத்தாh இக் கிராமத்தின் கடற்தொழிற் சங்க தலைவர்  விஸ்ணுதாஸ். 'மக்கள் என்னிடம் வந்து கதைத்தார்கள் நானும் கதைக்கவேண்டியவர்களுடன் எல்லாம் கதைத்து விட்டேன் ஆனால் எந்த பிரியோசனமும் தெரிவதாக இல்லை. இப்போது iஉசஉ நிறுவனம் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளது. வசதிகள் இல்லாத வீட்டிற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதாவது 58 வீட்டிற்கு மலசலகூடம் இல்லை. ஆனால் சுனாமி வந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரேஒரு வீட்டில் மட்டும்தான் மலசலகூடம் இருந்தது. அந்தக்காலப்பகுதியில் தான் பெரிதும் சிரமப்பட்டோம். கடலுக்குள் மலசலம் கழித்தவர்களும் வீடுகளுக்கு அப்பால் மலசலம் கழித்தவர்களும் அதிகம் என்று கூறியவரை இடை மறித்து
' கடலுக்குள் தற்போதும் இப்படியான காரியங்களை மக்கள் செய்கின்றார்களா?' என்று கேட்ட போது... தற்போது விரும்பத்தகாத காரியங்கள் செய்வது குறைந்துவிட்டது.அவ்வாறு அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவோருக்கு ஐந்நூறு ரூபா தொடக்கம் ஆயிரம் ரூபா வரை குற்றப்பணம் அறவிடப்படும். எங்கள் கடற்கரைக்குச் சுற்றுலாப்பயணிகள் வருகைதருகின்றனர். அதனால் கடற்கரையை அழகாக வைத்திருப்பது எங்கள் கடமை ஆகும்.இப்படியான காரியங்கள் நடைபெறுவதை நாம் யாரும் விரும்புவதில்லை' என்றார்.

'பக்கத்துவீட்டிற்கு இரவு நேரங்களில் சென்றால் முகம் சுழிப்பார்கள்' என்றார் இக்கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயதான நரேஸ் சந்திரவாணி. 'எங்கட வீடும் அலைன்ஸ் நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழுள்ள வீடுதான்.அதான் இன்னும் வீடு கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது.வீடே முழு மனையாக முடியவில்லை.மழை காலங்களில் அன்றாட வேலைகள் செய்வதிலும் தூங்குவதும் கஸ்ரம்.வீடு முழக்கத் தண்ணீர் வந்துவிடும். இருப்பதற்கே கஸ்ரம். குடிப்பதற்கு,குளிப்பதற்க்கு மற்றும் பிற தேவைகளிற்கான நீரை பக்கத்து வீடுகளில் இருந்தே பெறக்கூடிய நிலைமையில் இருக்கின்றோம். இதற்காக எத்தனை தடவை பேச்சு வேண்டி இருக்கறேன். அதுவும் நான் ஒரு பெண்.ஆண்கள் போல பொதுக்கிணற்றில் குளிக்கவா முடியும்? என்றார் மிக மனவேதனையுடன்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஒரு புறம் இருக்க எமது கிராமத்துக் கடற்கரையில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் எமது கிராமம் நீருக்குள் மூழ்கும் நிலைக்கு நாளுக்குநாள் வந்துகொண்டிருக்கிறது.' ஏன்று கூறினார் தும்பளை கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்ணுதாஸ்.

'சுனாமிக்குப் பிறகு கடல் மாரி காலத்தில் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறது. சுனாமி அடிப்பதற்கு முன்பு எங்கோ இருந்த கடல் தற்போது எமது கிராமத்தை நோக்கி ஊடுருவிக் கொண்டிருக்கிறது. எமதுகிராமக் கடற்கரையின் ஓரத்தில் மணல்மண் மட்டுமே உள்ளது.பாறைகள் எதுவும் இல்லை.மணலை நீர் அடித்துக் கொண்டே செல்கின்றது. 'யூசி' எனும் நிறுவனம் தடுப்பு மதில் கட்டுவதற்கு பணம் ஒதுக்கியுள்ளது. அவர்கள் தற்போது கொட்டடிப் பகுதியில் தடுப்பு மதிலைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக ;கிராமத்திற்க்குத் தற்போது தடுப்பு மதில் தேவையே இல்லை .ஏனெனில் அவர்கள் பகுதியில் இருக்கும் கடலில் பாறைகள் இருக்கின்றமையினால் மண்ணரிப்பு ஏற்படாது. ஆனால் எமக்கு அப்படி அல்ல.எங்களுக்குத் தடுப்புச்சுவரை வேகமாக கட்டித்தந்து எமது கிராமத்தை மண்ணரிப்பில் இருந்து விடாமல் கூறிமுடித்தார்.

இக்கிராமமக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது. 'கடலை விட மோசம் இந்த குளம்' என்றார் 80 வயது மதிக்கத்தக்க முதியவரான ஆறுமுகம் இராமச்சந்திரன். 'என் அப்பா, தாத்தா காலத்தில் இருந்து இப்பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது.மழைகாலத்தில் இக்குளத்தில் நீர் தேங்கிவிடும்.எல்லாக் கழிவுகளும் இந்நீரோடுதான். மாரி காலத்தில் இருக்கவும் முடியாது. இந் நீரில்  நுளம்புகளின் பெருக்கவும் அதிகம். மழைகாலத்தில் சும்மாவே இருக்கமுடியாது. இதில் நுளம்பும் சேர்ந்து கொண்டால் சொல்லவே தேவை இல்லை என்று கூறினார்.

இப் பிரச்சனை தொடர்பாக ஒருவரிடமும் தெரிவிக்கவில்லையா என கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்ணுதாசைக்  கேட்டபோது ' சுகாதாரப்பிரிவில் இருந்து எல்லோரும் பார்த்துவிட்டுதான் சென்றுள்ளார்கள் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. எங்களால் முடிந்தளவு மண் குப்பைகள் போட்டு மூடிவிட்டோம். ஆதற்கு மேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. எங்கள் கிராமத்தை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை சிரமதானம் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். இவற்றை ஒன்றுமே செய்யமுடியாதுள்ளது என்று தெரிவித்தார்.

அக் குளத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்களே நிரம்பி இருந்தது. இது மழைகாலத்தில்  இந்த குப்பைகள் நீருடன் கலக்கின்றது. இவை அனைத்தும் அங்கிருக்கும் பொதுக்கிணற்றில் கலப்பதனால் மாரிகாலங்களில் பொதுக்கிணற்றை யாரும் பயன்படுத்துவது கிடையாது. அதைவிட இப் பொதுக்கிணறு உடைந்த நிலையிலேயே உள்ளது. சுகாதார திணைக்கள அதிகாரிகள் குப்பைகளை போட்டு எரியுங்கள் கிணற்றையும் மூடிவிடுங்கள் என்று கூறியதனால் இக் கிராம மக்கள் மண்ணைப்போட்டு இயன்றளவு இக் கிணற்றை மூடி வருகின்றனர்.

இக் கிராம மக்கள் எத்தனை பிரச்சனைகளுடன் தான் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சனைகளில் தெருப்பிரச்சனைதான் தற்போது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மழைகாலங்களில் இக் கிராமத்துக்கு பயணம் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்துள்ளது. ஏனெனில் எல்லா இடங்களிலிலும் இருந்து வரும் தண்ணீர் இவர்களின் கிராமத்தின் வழியாலேயே கடலை அடைந்து கொண்டிருந்தது. இதனால் கிராமமே நீரில் மூழ்கி விடும். அந்த நேரங்களில் உதயசூரியன் சனசமூகத்தையே மக்கள் தஞ்சமடைவார்கள். மழைநீரை வெட்டி விடும் வரை மக்கள் தமது அன்றாட தேவைகளை செய்து முடிக்க மிகுந்த சிரமம் அடைந்திருந்தனர். இதற்கு முடிவு வந்தாற்போல வீதிகளுக்கு 'ஸ்லோன்பைப்' வைத்து கொங்கிறீட் வீதிகளை வழமைக்கு மாறாக ஆறு இஞ்சி உயர்த்தி வீதிகளை போட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த மாரி காலத்தில் இக் கிராம மக்கள் சிரமம் இல்லாமல் வீதிகளில் பயணிக்கின்றார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும.;

இவர்களின் பிரச்சனைகள் முடிவிற்கு வரவில்லை என்றால் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தில் இருந்த மதுபான கடையை ஒழித்தது போல எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால் தானோ இவர்களின் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வீதிப்பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் மக்கள் மற்றைய பிரச்சனைகளிலும் இருந்த மீண்டு வருவார்களா என்பது சந்தேகமே.

இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??



நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.

இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.
இன்று எத்தனையோ ஊடகவியலாளர்;கள் தமது உயிரை இழந்துள்ளனர்.பாதுகாப்பாக வாழமுடியாமல் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர்.

குகநாதன் தாக்கப்பட்டபோது அவருக்காக நடாத்தப்பட்ட பேரணியில் ஊடகசுதந்திரம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார்கள். இன்று ஊடகசுதந்திரம் இருக்கின்றது என்று கூறி மே மூன்றாம் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது.ஆனால் ஊடக சுதந்திரம் என்பது பெயரளவிலேயே மட்டும் காணப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்றால் ஊடகவியலாளர்கள் ஏன் தாக்கப்படுகின்றார்கள்? அவர்கள் ஏன் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியாமல் உள்ளது?

ஒருவரை ஆக்குவதும் அழிப்பதும் உச்சத்தில் ஏற்றி விடுவதும் தாழ்த்துவதும் ஊடகவியலாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது.இதனால்தான்  அன்று நெப்போலியன் அவ்வாறான வார்த்தைகளைக் கூறினார்.ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்கும் வலிமை ஊடகத்திற்க்கு இருக்கின்றது என்றால் மிகையாகாது.பேனா முனைமூலம் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகவியலாளர்களின் பெறுமதியை யார் உணருகிறார்கள்? அதைவிட அவர்களை அழிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் தினம் ஒன்று இருக்கின்றது என்று இன்னைய தலைமுறையில் எத்தனை பேரிற்க்குத் தெரியும்? அப்படித் தெரிந்திருந்தாலும் அவர்களது எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணமுடியும்.

1991ஆம் ஆண்டில் இருந்து ஊடகத்திற்கென சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிடுகின்ற போதிலும் இன்ற பெயரளவில் மட்டுமே  காணக்கூடியதாக இருக்கின்றது.

இச்சூழ்நிலையில் உலக ஊடக தினம் அர்த்தமுள்ளதா? ஏன்பது சந்தேகத்திற்குரியதே.

எது எவ்வாறு இருப்பினும், ஊடகவியலாளர்களினால் பல நன்மைகளை நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்கமுடியும் என்பது மறுக்க மற்றும் மறைக்க முடியாத உண்மை.

சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி



சிறுவர்களின் மனதிலே இருக்கும் எதிர்பார்ப்புக்களையோ எண்ணங்களையோ யாருமே எளிதில் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அவர்களுக்கும் தமது மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.
சிறுவர்களின் உலகம் மிகவும் பெரியது. ஆந்த உலகத்தில் எத்தனையோ விடயங்கள் உட்புதைந்து இருக்கின்றன. சாதாரணமாக சிறுவர்களுடன் உரையாடும் போது இதனை நன்றாக நாம் புரிந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு அவர்களின் விடயங்கள் சிறியதாக இருந்தாலும் அவர்களின் உலகத்தில் அந்த  விடயம் மிகவும் பெரியது.

சிறுவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை முதல் முறையாக வெளிக் கொண்டு வந்தது 'எனது உலகு' கண்காட்சி. சிறுவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வளழமையாக உள்ளதை உள்ளவாறே புகைப்படங்கள் கண்காட்சியாக நடைபெறுவது வழக்கம். இதற்கு மாறாக 3 தொடக்கம் 5 வரை இருக்கும் சிறுவர்களினால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவற்றை அப்படியே காட்சிப்படுத்தாமல் அந்தப் புகைப்படத்தில் சிறுவர்களினால் வரைகலை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. புகைப்படங்கள் எல்லோருக்குமே கதைகள் பலவற்றை சொல்லும். அதிலே வரைகலையும் செய்து காட்சிப்படுத்தும் போது எத்தனை கதைகள் சொல்லும் என்பதை சொல்லவா வேண்டும்.

ஏதிர்காலத்தை கட்டி எழுப்புவது சிறுவர்கள்தான். வரும்காலத்தில் தமது கிராமம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த 'எனது உலகு' கண்காட்சி மூலம் மறுவன்புலோ சிறுவர்கள் எடுத்துக்காட்டி இருந்தனர்.

மறுவன்புலோ கிராமம் மீள்குடியேற்றப்பட்ட கிராமம் ஆகும். நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் அங்கிருந்த மக்கள் 1995ம் ஆண்டுகளில் இக் கிராமத்தைவிட்டு வெளியேறி தற்போது கடந்த ஆண்டு ஆவணிமாதம் தமது சொந்த கிராமத்துக்கு மீள் குடியேறி உள்ளனர். இந்த கிராமம் மிகுந்த வறட்சியுடனும் ஆங்காங்கே வீடுகளுடனும் குடிப்பதற்கு நன்னீர் இல்லாமலும் இருக்கின்றது.

தமது கிராமம் சோலைகளுடனும்; அருகருகே வீடுகளுடனும் கோயில்களுடனும் இருக்கவேண்டும் இக்கிராம சிறுவர்கள் புகைப்படத்தில் வரைகலை செய்து இந்த சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டியிருந்தனர்.
அவர்களின் இவ்வாறான எண்ணங்களை வெளிக்கொண்டு வந்தது 'SDC' நிறுவனத்துடன் இணைந்து யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய மாணவர்கள்தான்.  இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களின் புகைப்பட ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் மறுவன்புலோ சகலகலா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களினால் பயிற்சிப்பட்டறை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.அதிலே சிறுவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு அவர்களின் எண்ணங்களுடன் வரைகலை செய்து காட்சிப்படுத்தப்பட்டன. இந்த செயற்பாடு மக்கள் மததியில் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்காட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள்.....இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. சிறுவர்களின் மனதிலே இருக்கின்ற விடயங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான கண்காட்சிகளை மேலும் நடாத்தவேண்டும். இதன் மூலம் மறுவன்புலோ சிறுவர்கள் எப்படி தங்கள் கிராமம் இருக்கவேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர்களின் ஆற்றலை மேலும் வளர்க்க உதவுகின்றது என்றனர்.

சிறுவர்களின் மனதிலே இருக்கும் விடயங்களை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வழி ஆகும். இதற்கு ஆரம்பப்புள்ளியை இட்டு வைத்திருப்பது 'SDC' நிறுவனமும் யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையமும் என்றால் மிகையாகாது.