flashvortex

Sunday, May 6, 2012

சமூகத்தினால் தன்னிலை இழந்த தப்பாட்டம்

காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் 'பழையன களைதலும் புதியன புகுதலும்' என்ற முதுமொழி  தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது.  இதற்க்கு பறை சிறந்த எடுத்துக்காட்டு.பறை தமிழர்களின் பாரம்பரிய கலை ஆகும். இப் பாரம்பரிய கலை இன்று சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லோராலும் தாழ்த்திப் பார்க்கப்பட்டு வருகின்றது. இப் பறையை  தப்பாட்டம் என்று அழைப்பர்.

இன்றைய தலைமுறைக்கே பறை பற்றி அதிகமானவர்களுக்கு  தெரியாது. அப்படி இருக்க இனி வரும் தலைமுறைக்கு எப்படி தெரியும். இதற்கு காரணம் சமுதாயம் மட்டுமே! பறை என்பது ஒரு கலை. இந்தக்கலையை தெரிந்திருப்பவர் எல்லா வாத்திய கலையையும் வாசிக்க தெரிந்திருப்பான்.

ஆரம்ப காலத்தில் இப்பறை எல்லோராலும் மதிக்கப்பட்டே வந்தது. இப் பறை சமூகம் சார்ந்த கலையாகும். இது போர் ஆரம்பிக்கபட போகுது என்றால் எல்லோருக்கும் தெரிவிக்க பயன்பட்டது. ஆதிகால மனிதர்கள் வேட்டையாடுவதையே தொழிலாக செய்து வந்தனர். வேட்டையாடிய பின்பு ஓய்வாக இருக்கும் நேரங்களில் விலங்குகளின் தோல்களை கொண்டே பறையை செய்தனர். விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையினை அடித்து ஒலியை எழுப்பி துரத்தி தம்மை பாதுகாத்து கொண்டனர். இது மட்டுமல்லாது ஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் இருப்பவர்களை அழைப்பதற்கும் பறையை பயன்படுத்தி உள்ளனர்.

விலங்குகளைக் கொன்றுஇ தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்துஇ காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும்இ வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறிஇ திருமணம்இ இறப்புஇ சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் கலையாகியது.

இவ்வாறு ஆதிகாலத்தில் முக்கியமாக இருந்த கலை இன்று மதிக்கப்படாமல் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சமுதாயம் என்றால் மிகையாகாது. பறை அடிப்பவர்களை என் இந்த சமூகம் இழிவாக பார்க்கின்றதோ?

பறை செய்வதற்கு வேம்பு மாட்டுத் தோல் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தெருவோரங்களில் இருக்கின்ற வேப்ப மரங்களையே அதிகம் பயன்படுத்துவர். இதற்கு காரணம் பறை அடிக்கும் போது அதிலிருந்து சத்தம் அதிகமாக வெளிவர வேண்டும் என்பதற்காக.... வீதிகளில் இருக்கும் மரங்கள் வாகனச் சத்தங்களை அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும். இதனால் பறை அடிக்கும் போது அதிகமான சத்தம் வெளியில் வரும். இதற்காகத் தான் பறை செய்வதற்கு தெருவோர மரங்களை பயன் படுத்துகிறார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.

பறை அடிப்பவர்களை இந்த சமூகம் சாதியின் பெயர் சொல்லி ஒதுக்க ஆரம்பித்தது. இதன்படி ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய  சமூகம்இ அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தைஇ சாவுமேளம் என என முத்திரை குத்தியது. இப்படியே காலம் செல்ல செல்ல சாதி குறியீடாக மாறியது. அச்சமூகத்தின்  இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது. ஆனால் சாவு வீடுகளில் பறை அடிப்பார்கள் வெட்டியான் என்றே அழைக்கபடுவர். பறை அடிப்பவர்கள் எல்லோரும் வெட்டியான் அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இக்காலகட்டத்தில் தான்  சமூகத்தினால் தாழ்த்தப்பட்ட கலைக்கு புத்துயிர் கொடுத்தவர் தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடலரசு வேணுகோபாலன். இவர் தன் கிராமத்தில் பட்டாதாரியாகி சட்டதரணியாகவும்  ஊடகவியலாளாளனாகவும்  கலைஞனாகவும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார். அதுமட்டும் அன்றி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து இவ் தப்பாட்டத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தவர்.  இத்தகைய கலைஞர்கள் இருக்கும் வரை பாரம்பரிய கலைகள் அழியாமல்  அடுத்த சந்ததியையும் சென்றடைந்து அவர்களும் இக்கலையை கற்றுக் கொள்வார்கள் 

இனிவரும் காலங்களில் பறை சாதி ஒடுக்கு முறையில் இருந்து விடுபட்டு ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போல இருப்பதற்கு இந்த சமூகம் பறை பற்றிய தப்பான அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நாட்டார் கலை என்பது குறித்த ஒரு சமூகத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஆனால் இன்று நாட்டார் கலையை அறிந்து இருப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். நாட்டார் கலையை அறிந்த மக்கள் குறைவாக இருந்தாலும் நாட்டார் கலை இன்னும் முற்றாக அழியவில்லை.

கருத்து சுகந்திரம்





ஒருவர் தான் விரும்பிய கருத்தை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. உரிமைகளும் சுகந்திரங்களும் என உலக நாடுகளில் மத்தியில் கூறிக் கொள்ளும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் மக்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளது யாருக்கு தெரியும்?

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகம் நிலைத்து விட்டது. மக்களுக்கு பூரண சுகந்திரம் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.

இவர்கள் தாம் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உயிருடன் நடமாடுவோமா என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். தமக்கு எந்த பிரச்சனையும் வராது என்ற விடயங்களுக்கே கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு விடயம் தொடர்பாக கருத்துக்களை கேட்பதற்கு அணுகியபோது தான் இவர்களின் கருத்துச் சுகந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரிந்தது.

அவர்கள் எங்களுக்கு நடந்தது தெரியும் நடப்பது தெரியும் ஆனால் சொல்ல மாட்டோம். நீங்கள் கேட்டுவிட்டு கண்டபடி எழுதுவீர்கள். அதற்கு பிறகு வரும் பிரச்சனைகளை யார் பார்த்துக் கொள்வார் என்று கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சனைக்கு நாவாந்துறை மக்கள் கூறினார்கள். கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சனைகள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினாலும் அது தொடர்பான பீதியில் இருந்து மக்கள் இன்னும் நீங்கவில்லை என்பது தெட்டத்தெளிவாகியது.

கிறீஸ் பூதம் தொடர்பாக அதிகளவில் பாதிக்கப்பட்டது நாவாந்துறை மக்களே. ஆனால் இவர்கள் இது தொடர்பாக எந்தவித தகவல்களையும் ஊடகங்களுக்கு தர மறுக்கின்றனர். எமக்கு குழந்தைகள் இருக்கின்றது. அவர்களின் எதிர் காலத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கருத்து சொன்னால் அடுத்த கணமே இருப்போமா இல்லையா என்று கூட தெரியாது. நீங்களே பாருங்கள். எங்களை சுற்றி எத்தனை இராணுவமுகாம்கள் இருக்கின்றது. இதற்கு பிறகும் நாம் எவ்வாறு பிரச்சனைகள் பற்றி சொல்லுவது. சில சில இடங்களை பாருங்கள் தானாகவே உங்களுக்கு புரியும் என்று தெரிவித்தனர்.

இவர்கள் ஒரு இக்கட்டான சூழலிலேயே வாழ்கின்ற தன்மையை பார்க்க கூடியதாக இருந்தது. அங்கிருக்கும் மக்கள் பயத்தின் காரணமாக தமது கருத்துக்களை தர மறுக்கின்ற சூழலே காணப்படுகின்றது.

இது மட்டும் அன்றி தமிழர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட விடயம் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம். இத் தீா்மானம் குறித்து எல்லோராலும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் யாருமே தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வைக்க மறுக்கின்றனர். நீங்கள் கூறும் கருத்துக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவற்றை நாம் வெளியிட மாட்டோம் என கூறினாலும் அதிகமான  மக்கள் தமது கருத்துக்களை வெளியிட மறுக்கின்றனர்.

இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் எம்மை இணைத்து விடாதீர்கள் எமது குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிடாதீர்கள் என்று தெரிவித்தனர். வேறு விடயங்களுக்கு கருத்துக்கள் வேண்டும் என்றால் தருகின்றோம் ஆனால் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு மட்டும் கருத்துக்கள் தர மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக வேறு ஒரு பொதுமகனை சந்தித்த போது நான் உங்களுக்கு கருத்து தருகின்றேன். என்னை யார் பாதுகாப்பார். எனக்கு வரும் பிரச்சனைகளுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுங்கள் நான் கருத்து தருகின்றேன் என்று கூறினார். உயிருக்கு யார் உத்தர வாதம் தருவது என்ற கருத்து எல்லோரினாலும் முன் வைக்கப்பட்டது.

இது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் இப் பிரச்சனை தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் தர மாட்டாம். இப்போது தான் நாம் இலங்கை வந்துள்ளோம். நாம் உயிருடன் திரும்பி  எமது நாட்டுக்கு போக வேண்டும் தயவு செய்து எம்மை பிரச்சனைக்குள் இழுத்து விடாதீர்கள் என்று தெரிவித்தனர்.

ஜெனிவா பிரச்சனை தொடர்பாக கருத்துக்கள் கேட்டாலே அந்த இடத்தை விட்டு நீங்கி விடுகின்றனர். சிலர் அரசாங்கத்துக்கு எதிராக நா்ம் கருத்து தர மாட்டோம் வேண்டும் என்றால் அரசாங்கத்துக்கு  ஆதரவாக கருத்துக்கள் தருகின்றோம் என்று கூறியவர்களும் இருக்கின்றனா்.

பொது மகன் ஒருவர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரை கூறி அவர் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக் கூறியதால் இன்று உயிரோடு இருக்கின்றாரா என்பதற்கு விடை தெரியாமல் இருக்கின்றோம். அது போலதான் கருத்துக்களை் வெளியிட்டால் எமது நிலைமையும். அதைவிட் மீண்டும் வெள்ளை வான் பிரச்சனை தொடங்கிவிட்டது. உங்களுக்கு கருத்து சொன்னால் அடுத்த கணமே என் வீட்டு வாசலில் வெள்ளை வான் நிற்கும் என்று கூறினார்.

இலங்கையில் இருக்கும் வரை ஒரு  கருத்தை சுகந்திரமாக சொல்ல முடியாத சூழலே இன்று உள்ளது. இலங்கையில் இல்லாத தமிழர்கள் இலங்கை மக்களுக்காக குரல் எழுப்புகின்றனர். இவர்களும் இலங்கை வந்துவிட்டால் வாய்பேசா மடந்தைகள் ஆகிவிடுவார்கள்.